மன்னித்துவிடு..
உனது மன அமைதியில் கல்லெறிந்து விளையாடிய அத்தனை பேரையும் மன்னித்து விடு. அவர்கள் மன்னிப்பு கேட்டதால் அல்ல... அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்காகவுமல்ல. அவர்கள் தந்த வலிகள் மறைந்துபோனதாலும் அல்ல.!
மன்னித்துவிடு ஏனெனில் மன்னிப்பை கொடுத்து விட்டு தான் உன்னால் முன்னோக்கி நகர முடியும்.. வைராக்கியம் கலக்காமல் மூச்சு விட முடியும்.. வாழ்க்கை என்றும் தலையை தடாவி பாடம் கற்றுத்தருவதில்லை.. தலையில் அடித்து கற்பிக்கும் பாடங்கள் மிகுந்த பெறுமதியானவை.. அந்த பாடங்களை கற்க காரணமாக இருந்தவர்களை மன்னித்துவிடு..
மன்னிப்பு உனது மன முதிர்ச்சியை காட்டுகிறது. அது உனது பண்பை பிரதிபலிக்கிறது. அவர்களை காலம் ஒரு கை பார்க்கட்டும்.. நீ விட்டு தூர வந்து விடு.. மன்னித்துவிடு .!
- வாழ்வை துவங்கு!
படித்ததில் பிடித்தது..,
COMMENTS