"வாட்ஸப்" தரும் எரிச்சல்கள் இவை...
1.இன்னும் கோவில்பட்டியிலும், காஞ்சிபுரத்திலும் அந்த ஸ்கூல் பஸ் ஆக்ஸிடன்ட் ஆகி கொண்டிருக்கிறது. ரத்தம் தேவைபட்டு கொண்டிருக்கிறது.
2.இன்னும் பார்த்த 5 நொடியில் ஷேர் செய்பவர்களுக்கு கடவுள் காலைக்குள் நல்ல செய்தியை தந்து கொண்டிருக்கிறார்.
3.இன்னும் அந்த நெட்வொர்க்காரர்கள் பாவப்பட்ட அந்த பெண்ணின் படத்தை ஷேர் செய்தால் ஒரு ஷேருக்கு 10 பைசா வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
4.இன்னும் "யோசிப்போர்கள் சங்கம்" காமெடிக்கு சிரித்து கொண்டிருக்கிறார்கள்.
5.இன்னும் சூரத் ரயில் நிலையத்தில் காணாமல் போன குழந்தை அவர்கள் வீட்டில் ஒப்படைக்கபடவில்லை.
6.இன்னும் 10 வயது குழந்தைக்கு AB- தேவைப்படுகிறது
7.இன்னும் "சர்தார்ஜிகள்" பழைய காமெடிகளுக்கு வேஷம் போடுகிறார்கள்.
8.இன்னும் அந்த எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் மாஸாவில் கலந்து கொண்டிருக்கிறது.
9.இன்னும் புற்று நோய்க்கு அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் இலவச மருந்து தருகிறார்கள்.
10.இன்னும் ஆபத்து நேரத்தில் ஏடிஎம் பின் நம்பரை ரிவர்சில் டைப் பண்ணினால் போலீஸ் உதவி கிடைக்கிறது.
11.இன்னும் 500ரூ க்கு ப்ளிப்கார்ட் ஐபோன் வழங்குகிறது.
12.இன்னும் 2000 ரூ நோட்டில் சிப் வைக்கபடுகிறது.
13.இன்னும் யார் இறந்தாலும் மர்மங்கள் மெசேஜ்லயே தொடர்கிறது.
14.இன்னும் அந்த மெசேஜை அடுத்த குரூப்புக்கு அனுப்பினால் உங்கள் பேட்டரி 100% நிரம்பும் அதிசயம் நடக்கிறது.
15.இன்னும் அந்த மெசேஜை பார்வர்டு செய்பவர்களுக்கு இலவச டாக்டைம் கிடைக்கிறது.
16) இன்னும் கோவை சுங்கச்சாவடியில் பைக் ஆக்சிடன்ட் ஆன நபர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்படவே இல்லை.
17) சற்று முன் நமது தேசியகீதம் யுனெஸ்கோவால் சிறந்த தேசியகீதம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
18) இன்னும் காணாமல் போன certificate கிடைக்கவில்லை...
19) இன்னும் ஈழத்தமிழர்களுக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது..
20) இன்னும் இருக்கு..... போதும் டா
"வாட்ஸப்" தரும் எரிச்சல்கள் இவை..😞
COMMENTS