*வரலாற்றில் இன்று (05/01/2017)*
ஷாஜகான்
💖 இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பாகிஸ்தானின் லாஹூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஷஹாபுதீன் முகம்மது ஷாஜகான்.
💖 இவர் 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததைத் தொடர்ந்து அவர் அரியணை ஏறினார். மேலும் இவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.
💖 இவருடைய ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளாக இருப்பது, அஹ்மத்நகர் இராஜ்ஜியத்தின் அழிப்பு (1636), பெர்சியர்களிடம் கந்தஹார்-ஐ இழத்தல் (1653), மற்றும் டெக்கன் இளவரசிக்கு எதிராக இரண்டாவது போர் (1655) ஆகியனவாகும்.
💖 ஷாஜகான் எழுப்பியுள்ள நினைவுச்சின்னங்களில் தாஜ்மஹால் மிகவும் பிரபலமானது. இது அவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது.
💖 433 ஈரோஸ் என்ற சிறுகோள் மீதுள்ள ஒரு நிலக்குழிக்கு ஷாஜகான் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. இவர் 1666ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி மறைந்தார்.
ரா.கிருஷ்ணசாமி நாயுடு
🏁 விடுதலைப் போராட்ட வீரர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு 1902ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புது.ராமச்சந்திரபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார்.
🏁 இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்னை மாநிலத்தின் முதல் சட்டமன்றத்திற்கு 1952இல் எதிர்க்கோட்டை தொகுதியில் இருந்தும், தமிழ்நாடு சட்டசபைக்கு 1957இல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும், 1962இல் ராஜபாளையம் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🏁 மகாத்மா காந்தியின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என காமராஜரால் புகழாரம் சூடப்பட்ட இவர் தன்னுடைய 72வது வயதில் (1973) மறைந்தார்.
பரமஹம்ச யோகானந்தா
✋ இந்திய ஆன்மிக ஞானச் சுடரொளியை உலகெங்கும் பரவச் செய்தவரான பரமஹம்ச யோகானந்தா 1893ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பிறந்தார். இவர் இயற்பெயர் முகுந்தலால் கோஷ்.
✋ தனக்கு யோகானந்தா என்ற பெயரை அவரே தேர்ந்தெடுத்தார். திஹிகா நகரில் ஆண்களுக்கான பள்ளியை 1917-ல் தொடங்கினார். இங்கு பாடங்களோடு, யோகாமுறைகளும் கற்றுத்தரப்பட்டன. பின்னாளில் இது யோகதா சத்சங்க சொசைட்டியாக மாறியது.
✋ இவருக்கு பரமஹம்சர் பட்டம் 1936-ல் சூட்டப்பட்டது. இவர் ஆட்டோபயோகிராபி ஆஃப் எ யோகி என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். இது தமிழ் உட்பட 34 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
✋ மகா அவதார் பாபாஜி குரு பரம்பரையில் தோன்றிய இவர் தன்னுடைய 59-வது வயதில் (1952) முக்தி அடைந்தார்.
📻 1940ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பண்பலை வானொலி முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.
🎾 1971ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்பேர்ணில் நடைபெற்றது.
📰 1944ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி டெய்லி மெயில், கடல் தாண்டி சென்ற முதல் செய்தித் தாளானது.
🌗 2005ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
COMMENTS