👩பெண் 👶குழந்தையை கொல்ல முயன்ற தந்தை😱
கன்னியாகுமரி மாவட்டத்தில், பெண் குழந்தை பிறந்ததால், குழந்தையின் தந்தையே கொல்ல முயற்சி செய்துள்ளார்😱. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த ராபின்சன் மனைவி மேரி பியர்லி, பிரசவத்துக்காக குளச்சல் தனியார் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது😯. ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3வதும் பெண் குழந்தையாகப் பிறந்ததில் ராபின்சன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது😳. இதனை அடுத்து அந்த குழந்தையை மருத்துவமனையிலேயே கொல்ல முயன்ற தந்தை ⛓கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ⛓சிறையில் உள்ள கணவரை காப்பாற்றுவதிலேயே தாய் கவனம் செலுத்துவதால் பெண் குழந்தையை தாயிடம் இருந்து குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டுள்ளனர்😯. சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் நெல்லையில் உள்ள காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா தெரிவித்துள்ளார்🔈.
COMMENTS