மத்திய அரசு திட்டங்களின் பெயர் மாற்றம்
🏛மத்திய அரசு திட்டங்களுக்கு நேரு, காந்தி பெயர்கள் வைக்கப்படுவதை மத்திய அரசு தொடர்ந்து மாற்றி வருகிறது😳. அந்த வகையில் தற்போது ஒரு திட்டத்தில், முன்னாள் பிரதமர் 'இந்திரா' பெயர் நீக்கப்பட்டுள்ளது😱. 60 ஆண்டுகளுக்கு மேல் காங்., தலைமையில் தான் மத்திய அரசு செயல்பட்டு வந்தது👍. அதனால் எல்லா 🏛மத்திய அரசு திட்டத்திற்கும் காந்தி, நேரு, ராஜீவ், இந்திரா போன்ற பெயர்கள் தான் வைக்கப்பட்டு வந்தனர்😯. ஆனால், 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின், அனைத்து திட்டங்களுக்கும், 'பிரதம மந்திரி திட்டம்' என, பொதுவாக பெயரிடப்பட்டு வருகிறது😳. அந்த வகையில், கர்ப்பிணி 👩பெண்கள், பாலுட்டும் பெண்களுக்கு நிதியுதவி அளிக்க, 2010ம் ஆணடில், காங்க்., தலைமையிலான மத்திய அரசு இந்த திட்டத்திற்கு, ' இந்திரா காந்தி மாத்ரித்வா சயோக் யோஜனா' என்று பெயரிட்டது👍. இதனை தொடர்ந்து, தற்போதைய மத்திய அரசு இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி உள்ளது👍. மேலும், திட்டத்தின் பெயரையும், 'பிரதம மந்திரி மாத்ரித்வா சயோக் யோஜனா' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது😟 என்பது குறிப்பிடத்தக்கது😳.
COMMENTS