காலை செய்திகள்-03/06/2017
4 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவிலிருந்து பிரான்ஸ் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பீகாரில் ப்ளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற கணேஷ் குமார், வயதை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜி.எஸ்.டி., கவுன்சில் இன்று கூடுகிறது
சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித் துறை ஒப்பந்த ஊழல் விவகாரத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோருக்கு எதிரான புகார்கள், மூன்று தனித்தனி வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தில்லி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.
ஜாமீனில் வெளியான தினகரன் இன்று(ஜூன்3) சென்னை வருகிறார்
சென்னை தி நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி 2 வது நாளாக தொடர்கிறது. ஜா கட்டர் இயந்திரங்கள் மூலம் கட்டிடத்தின் பின்புற பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. 3 நாட்களில் கட்டிடம் முழுமையாக இடிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
பிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு
தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷியாவின் கடனுதவியுடன் ரூ.50,000 கோடி செலவில் 5-ஆவது மற்றும் 6-ஆவது அணு உலைகள் அமைக்கப்படவுள்ளன
கோவை: 4 பேரை கொன்ற யானை காட்டுக்குள் விடப்பட்டது
காசிமேடு மீன் விற்பனை கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
கடலூர் சோதனைச்சாவடியில் ரூ.20 லட்சம் பறிமுதல்
சென்னை ஐஐடி இயக்குநராக பாஸ்கர் ராமமூர்த்தியை நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசு சட்ட கல்லூரிகளில் 5 வருட பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் சேர விண்ணப்பம் கொடுக்கும் பணி நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க 23-ந்தேதி கடைசி நாள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சேவை மகத்தானது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த, தரம் குறைந்த கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும்' என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
கும்பகோணம் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சவுந்தர்ராஜ் பிளேடால் அறுத்து கொலை செய்யப்பட்டார். சொத்துத்தகராறில் சவுந்தர்ராஜை கொலை செய்து விட்டு இளைராஜா தலைமறைவானார்.
காஞ்சிபுரம் அருகே அரசு பேருந்து - லாரி மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை விலக்கா விட்டால்சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.
தமிழகத்தில் அரசியல் செய்ய துணிச்சல் தேவை: தமிழிசை செளந்தரராஜன்
கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருந்தாலும் தங்கள் ஊழியர்களுக்கு நேற்றே சம்பளம் கொடுத்து அவர்களின் வாட்டத்தை போக்கி உள்ளது சென்னை சில்க்ஸ்.
கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா: ராகுல், நிதிஷ் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்ப்ன திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு துணை போகக் கூடாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை பணியாளர் நல அதிகாரியாக சுனிதா வேதாந்தம் பொறுப்பேற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத், சாந்த்ராகாச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 14 ஆயிரம் கிலோமீட்டராக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் அளவு இரட்டிப்பாக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்
புதுச்சேரி அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதை புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என, முதல்வர் வி.நாராயணசாமி எச்சரித்துள்ளார்
போலி நிறுவனம் மூலம் சிஎன்ஜி கருவிகளை தலைநகரில் விற்பனை செய்ய கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அனுமதி அளித்தது எனும் புதிய குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்தார்.
மாட்டு இறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்து கிருஷ்ணகிரியில் மாட்டுக்கறி சாப்பிட்டு மோடி அரசிற்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்
பிறந்த நாள்-வைர விழா புதுச்சேரி சட்டசபையில் கருணாநிதிக்கு பாராட்டு
கிருஷ்ணகிரியில் நாற்பது ஆண்டுகளாக வீடுகள் இல்லாமல் இருப்பதற்கு நடவடிக்க்கை எடுக்காததால் ஆதார் அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் குறவர் இன மக்கள் இறங்கினர்.
பிலிப்பைன்சில், பொழுதுபோக்கு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர், தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவத்தின் போது வெளியான நச்சுப் புகையை சுவாசித்த, 36 பேர் பலியாகினர்
ஆபரணத்தங்கத்தின் விலை சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.22,176-க்கு விற்பனையானது.
சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.12 குறைந்து, ரூ.2,772-க்கு விற்பனை செய்யப்பட்டது
COMMENTS