51 நாட்களாக நீடிக்கும் நெடுவாசல் போராட்டம், தீர்வு தான் என்ன⁉
ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு❌ தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராம மக்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக🚫 போராட்டம் நடத்தி வருகிறார்கள்👍. நேற்று 50வது நாளாக நடந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள்🏛, மாவட்ட நிர்வாகம் கண்கள்🙈, வாயை கட்டிக்கொண்டு🙊மக்கள் பிரச்னையை செவிகொடுத்து கேட்காதது🙉போல் சித்தரித்து சிறுவர்கள் கண், வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, அவர்களிடம் விவசாயிகள் இந்த திட்டத்தை ரத்து🚫 செய்ய கோரி மனுகொடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்😳. இதனை அடுத்து, இன்று 51 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் விவசாய மக்கள், இந்த போராட்டத்தை தீவிர படுத்த அனைத்து தரப்பினரும் ஆதரவு கோரியுள்ளதாக தெரிவித்துள்ளனர்🔈.
COMMENTS