*🔖சென்னை சில்க்ஸ் இடிக்கப்படும்: அமைச்சர்♨*
சென்னை: சென்னை சில்க்ஸ் அரசின் சார்பில் இடிக்கப்படும் , எனவும்எ இது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். தீவிபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை அமைச்சர் உதயகுமார் மீண்டும் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: ஐஐடி வல்லுநர்கள் கருத்து அமைச்சர்கள், அதிகாரிகள் இங்கேயே முகாமிட்டு, தீயணைப்பு வீரர்களுக்கு தேவையான ஆலோசனை, அறிவுரை வழங்கி வருகின்றனர். வீரர்கள் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தனல் காரணமாக அவ்வபோது ஏற்படும் தீயை அணைக்க வீரர்கள் தயாராக உள்ளனர். கட்டடத்தை நிபுணர் குழு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பிறகு அரசின் சார்பில் கட்டடம் முழுவதும் இடிக்கப்படும். இதற்காக ஐஐடி வல்லுநர்கள் கருத்து கேட்கப்படும். தீவிபத்து காரணமாக தூண்கள் பலமாக உள்ளது. ஆனால் சுவர் பலவீனமாக உள்ளது.
கட்டடத்தை இடிப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரி ஜெய்சிங் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.®
COMMENTS