#நெல்லிக்காய் மரத்த எப்படி மாடி தோட்டத்துல வளர்பது??
#தேவையான_பொருட்கள்
1. 75 லிட்டர் முதல் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்.
2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகவ்யா.
3. நடுவதற்கு ஏற்ற ஒட்டு செடிகள்
4. நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
#தொட்டிகள்
இதற்கு டிரம்களில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் மற்றும் தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கலந்து வைக்க வேண்டும். தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் மண் இறுக்கமாகாமல் இலகுவாக இருக்கும். இதன் மூலம் வேர்கள் நன்கு வளரும். தயார் செய்துள்ள டிரம்களில் 10 நாட்களுக்கு பிறகு செடிகளை நடவு செய்ய வேண்டும்.
#விதைத்தல்
மாடிதோட்டத்தை பொருத்தவரையில் ஒட்டுச்செடிகளே நல்லது.அருகில் உள்ள Nurseryயில் வாங்கிக் கொள்ளுங்கல். எப்போதும் செடியை தொட்டியின் நடுப்பகுதியில் வைத்து நடவு செய்ய வேண்டும்.
#நீர்_நிர்வாகம்
நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பயன்படுத்தும் டிரம்மின் அடிப்பகுதியில் இரு துளைகளை இட வேண்டும். இதனால் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வெளியேறி விடும். இல்லை எனில் தண்ணீர் அதிகமாக இருந்தால் வேர்கள் அழுகி விட வாய்ப்புள்ளது.
#உரங்கள்
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
ஒரு கையளவு சாணத்தை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும். சாணம் அதிகமாக இருந்தால் எறும்புகள் வர வாய்ப்புள்ளது. குறைந்தளவு சாணத்தை தான் பயன்படுத்த வேண்டும்.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.
#பாதுகாப்பு_முறைகள்
பூச்சிகளை கட்டுப்படுத்த பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை அரைத்து ஊறவைத்து வடிகட்டி தெளிக்க வேண்டும்.
நுனிகளை கிள்ளி விட்டு பக்கக்கிளைகளை வளரவிட வேண்டும். மூன்று கிளைகளுக்கு மேல் வளர அனுமதிக்க கூடாது.
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும்.
#மூடாக்கு
கிடைக்கும் மக்க கூடிய பொருட்களை கொண்டு மண்ணின் மேல்புரத்தை கணமாக மூடி வைக்கவும்!
*ஈரப்பதம் காக்கப்படும்
*களை செடி வளராது
*அதுவே மக்கி உரமாகும்
*மண்ணுயிர்களுக்கு வாழ்விடமாகும்.
#அறுவடை
(ரகத்தை பொருத்து அருவடை காளம் மாறுபடும்)
இது நன்கு வளரும் தன்மை கொண்டது. இதை மாடியின் ஒரு மூலைப்பகுதியில் வைப்பது நல்லது. அறுவடைக்கு சுலபமாக இருக்கும். நன்கு திரண்ட காய்களை மட்டும் பறிக்க வேண்டும்.
(குறிப்பு-இந்த முறையானது எல்லா குறு மரத்திற்கும் பொருந்தும்.)
COMMENTS