மின்சாரம் என்றால் இதுதானா⁉குக்கிராம மக்கள்
இந்தியாவிற்கு விடுதலை கிடைத்து 70 வருடங்கள் ஆகிறது👍. நமது நாடே நவீன முறையில் மாறியுள்ளது🙂. ஆனால், கடந்த சனிக்கிழமை முதல் தான் தமிழகத்தை சேர்ந்த மலைப்பகுதி கிராமங்களான செம்புக்கரை மற்றும் தூமானூர் பகுதிகளுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது😱. 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வரும் இந்த கிராமத்தில் 🔌மின்சார வசதி கொண்டுவர கடந்த 4⃣வருடங்களுக்கு முன்னரே மின்வாரியத்தால் ஒப்பந்தம் மேற்கொள்ள பட்டது😯. ஆனால் அது உடனே கைவிடப்பட்டது😟.
பின் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுகுட்டியின் நடவடிக்கைகளால், கடந்த ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் மீண்டும் உயிர்பெற்றது👍. எனினும், தற்போது நான்கில் ஒரு பங்கு மட்டும் தான் 🔌மின்சார இணைப்பு பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது😳. மேலும், தமிழக அரசு கொடுத்த டிவி, மிக்சி போன்றவைகளும் இவர்களுக்கு ஓர் காட்சி பொருளாகவே இருந்துள்ளது😱. மிக விரைவில் இந்த கிராமம் முழுவதும் மின் வசதி செய்து தரப்படும் என்று மின் வாரியத்துறை அறிவித்துள்ளது🔈.
COMMENTS