இரு 💕இதயத் துடிப்புடன் வாழும் அதிசய மனிதர்😱
நாட்டில் முதல்முறையாக இரு 💕இதயத்துடிப்புடன் கேரளாவைச் சேர்ந்த அதிசய மனிதர் உயிர் வாழ்கிறார்👍.கோவை மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்ற அந்த நபரின் இதயம் வெறும் 10% மட்டுமே செயல்பட்டதாகவும், மாறாக அவரது நுரையீரல் அதிக அழுத்தத்துடன் இருந்ததால், புதிய இதயம் மாற்றினாலும் அது பயனளிக்காது😟 என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்😯. ஏனெனில், நுரையீரலின் அழுத்தத்தை புதிய இதயத்தால் தாங்க முடியாது😳 என இருதய அறுவை சிகிச்சை நிபுணர் பிரசாந்த் வைஜயநாத் தெரிவித்தார்🔈.
இதனை அடுத்து, இந்த நபருக்கு இதயம்-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது தான் ஒரே வழி என தீர்மானிக்கப்பட்டது👍. இதன் மூலம், செயற்கை இதயத்தை பொருத்தி, பழைய இதயத்தின் செயல்பாடுகளை முற்றிலுமாக குறைத்து புதிய இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும் வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்🙁. இந்நிலையில், அந்த நபருக்கு ஏற்றவாறு மூளைச் சாவடைந்த ஒரு 👩பெண்ணின் ♥இதயம் கிடைத்ததால், அவருக்கு ஹெட்டிரோட்டோபிக் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்🔈.சுமார் 3.30 நிமிடம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின்போது சுமார் 5 இடங்களில் நோயாளியின் இதயம் இணைக்கப்பட்டது😯. இடதுபுறம் 3 இடங்களிலும், வலதுபுறம் 2 இடங்களிலும் இணைக்கப்பட்டது😳. இந்த அறுவை சிகிச்சை, அவரது பலவீனமான இதயத்துடிப்பை தடுத்து நிறுத்தாமல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது👍. இதனை அடுத்து, தற்போது கேரளாவை சேர்ந்த அந்த மனிதர், கோயம்பத்தூர் 🏥மருத்துவமனையில் நலமாக உள்ளார்👍.
COMMENTS