🏦வங்கி கணக்கிற்கு இனி ஆதார் கட்டாயம்👍
🏦வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் இனி கட்டாயம் என 🏛மத்திய அரசு அறிவித்துள்ளது🔈. வங்கி கணக்கு வைத்திருப்போரும் ஆதார் எண்ணை டிசம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 90 சதவீதம் பேருக்கு ஆதார் அடையாள எண் அளிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது😯. இதையடுத்து, அரசு திட்டங்களில் முறைகேடுகளை களைய அவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வருகிறது மத்திய அரசு. காஸ் இணைப்பு, மதிய உணவு, பயிர் காப்பீட்டு திட்டம், விமான பயணம், திருப்பதி தரிசனம் உள்ளிட்டவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது😳. டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்பிக்கத்தவர்கள் கணக்கு செல்லாது எனவும் 🏛மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இனி 💸50,000 அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
COMMENTS