மின்சார பேருந்து விரைவில் சென்னைக்கு வருகிறது
சென்னையில் விரைவில் சோதனை அடிப்படையில் மின்சார 🚎பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்🔈. சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்👍. இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்🎙, 'ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையில் இதுவரை 1,250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை செப்டம்பர் மாதத்தில் வழங்குவதற்கு முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்'. என்று கூறினார்👍.
மேலும், இது குறித்து அவர் பேசுகையில்🎙,"போக்குவரத்து துறையில் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி படுக்கை வசதியுடன்கூடிய பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்துள்ளோம். சோதனை அடிப்படையில் சென்னையில் மின்சார மாதிரிப் பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டாடா மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்களிடம் மாதிரிப் பேருந்துகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் சென்னையில் இந்தச் சோதனை நடைபெறும்". என்று தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS