விரைவில் வருகிறது இலவச ஜியோபோன்...ரிலைன்ஸ் மீண்டும் அதிரடி
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ பீச்சர்போனினை ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ பீச்சர்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி எல்டிஇ வசதி கொண்ட ஜியோபோனினை அறிமுகம் செய்தார்.
புதிய ஜியோபோன் இந்தியாவின் 50 கோடி பீச்சர்போன் வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் வசதி வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்தியாவில் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவச வாய்ஸ் கால்களை வழங்குகிறது. இத்துடன் ஜியோபோன்களில் அன்லிமிட்டெட் டேட்டா பயன்படுத்த மாதம் ரூ.153 செலுத்தினால் போதுமானது. ஜியோபோனில் தண் தணா தண் சேவைகளை ரூ.153 மட்டும் செலுத்தி பயன்படுத்தலாம்.
ஜியோபோன் மட்டுமில்லாமல் டிவியை மேலும் ஸ்மார்ட்மாக மாற்றும் ஜியோபோன் டிவி-கேபிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து டி.வி.க்களிலும் இணைத்து வீடியோக்களை பெரிய திரையில் காணலாம். இத்துடன் ஜியோ தண் தணா தண் சலுகை ரூ.309க்கு வழங்கப்படுகிறது
புதிய ஜியோபோன்களில் பயன்படுத்த இரண்டு சாஷெட் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.24 செலுத்தி இரண்டு நாட்களும், 54 ரூபாய் செலுத்தி ஒரு வாரத்திற்கு ஜியோ சேவைகளை பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் புதிய ஜியோபோன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோபோன் வாங்குவோர் திரும்பப் பெறக் கூடிய ரூ.1,500 மட்டும் செலுத்தி புதிய ஜியோபோனினை வாங்க முடியும். மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த தொகை திரும்ப வழங்கப்பட்டு விடும்.
ஜியோபோன் சிறப்பம்சங்கள்:
* 4ஜி எல்டிஇ
* வாய்ஸ் கமான்ட்வசதி
* ஜியோ செயலி சப்போர்ட்
* பல மொழிகளில் இயக்கும் வசதி
* எண் 5 அழுத்தி அவசர எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி
* விரைவில் என்.எஃப்.சி. வசதி
* வங்கி சேவைகளை இயக்கும் வசதி
ஜியோபோன் வாங்க விரும்புவோருக்கு ஆகஸ்டு 15 முதல் பீட்டா சோதனை முறையில் வழங்கப்படுகிறது. பீட்டா சோதனை இல்லாமல் ஆகஸ்டு 24 ம் தேதி முதல் ஜியோபோன் வாங்க முன்பதிவு செய்ய முடியும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
.
.
.
.
.
COMMENTS