'1000ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் புழக்கத்திற்கு வராது'-மத்திய அரசு
'1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் இல்லை' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, புதிய, 500 - 2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, புழக்கத்தில் உள்ளன. இதையடுத்து, புதிதாக, 50 - 200 ரூபாய் நோட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாதெனவும், 1000ரூபாய் நோட்டுக்கள் இனி புழக்கத்திற்கு வராது என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
நன்றி
Duta
COMMENTS