தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6மாதங்களாகும்-தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் உள்ளாட்சி
தேர்தல் நடத்த 6 மாதம் ஆகும் என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில் ஓர் வழக்கினை தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தல் நடத்த இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், தொகுதி வரையறை சட்டப்படி தொகுதிகள் பிரித்த பின்பே தேர்தல் நடத்த இயலும் எனவும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 6-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
COMMENTS