மணல் குவாரிக்கு எதிர்ப்பு-முதல்வரை மிரட்டிய வாலிபர் கைது
வாலாஜா அருகே மணல் குவாரிக்கு 🚫எதிர்ப்பு தெரிவித்து, 📱‘வாட்ஸ் அப்’பில் 💺முதல்வர், 👮அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை 👮போலீசார் கைது செய்தனர்⛓. வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த திருமலைச்சேரி பகுதியை சேர்ந்தவர் 👨விக்னேஷ்வரன்(27). எம்எஸ்சி பட்டதாரி👍. பாலாற்றில் அரசு மணல் குவாரி அமைப்பதை 🚫எதிர்த்து பல்வேறு துறை 👮அதிகாரிகளுக்கு அவ்வபோது 📄புகார்களை அனுப்பி வந்துள்ளார்😯.
இந்நிலையில், நேற்று முன்தினம் விக்னேஷ்வரன் தான் பேசிய 📹வீடியோ காட்சி பதிவை, 📱‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்டார்😳. அந்த 📹வீடியோவில் தமிழக முதல்வர், கலெக்டர், எஸ்பி ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்து மிரட்டும் பாணியில் இருந்தது😮. வைரலாக பரவிய இந்த 📹வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, விஏஓ சம்மந்தம் புகாரின்படி, வாலாஜா 👮போலீசார் வழக்குப்பதிந்து விக்னேஷ்வரனை ⛓கைது செய்தனர்.
COMMENTS