மொபைல் போன் அடையாள எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை
📱மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டு சிறை⛓ அல்லது 💸அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்👍 என 🏛மத்திய தொலைத் தொடர்புத் துறை அரசாணை⚖ பிறப்பித்துள்ளது. 📱மொபைல் போனின் பேட்டரி செருகும் இடத்தில் இந்த எண் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருக்கும். டபுள் சிம் போடும் மொபைல்களில் இரு ஐஎம்இஐ எண்கள் இருக்கும்👍. போன்கள் திருடு போனால் அந்த எண்ணை வைத்து கண்டறிய முடியும்😯. ஆனால், தற்போது சிலர் 💻சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி, அந்த எண்ணை மாற்றி விடுவதால், திருடிய 📱போன்களை கண்டறிவது கடினமாகியுள்ளது😟.
அதுமட்டுமின்றி, பயங்கரவாதிகள் தங்கள் சமூக விரோத செயல்களுக்கு😳 இது போன்ற திருட்டு போன்களைப் பயன்படுத்துவதாகவும், சமீபத்தில் ஒரே ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு 📱18,000 போன்கள் செயல்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது😯. எனவே இவற்றைத் தடுக்கவே🚫 இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது👏. மேலும், திருட்டு போன மொபைல் 📱போன்களை உடனே செயலிழக்க செய்யும் தொழில்நுட்பத்தை வடிவமைத்து வருவதாகவும் தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS