இந்தியாவின் தூய்மைவாய்ந்த கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு
இந்தியாவிலேயே சிறந்த கோயிலுக்கான 🏛மத்திய அரசின் 🏆விருதை மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெற்றுள்ளது. 🏛மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தூய்மையான புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன👍. இந்தப் பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இடம்பிடித்திருந்தது😳. இதன்படி மீனாட்சி அம்மன் கோவிலை தூய்மையான கோயிலாக மேம்படுத்துவதற்காக மதுரை மாநகராட்சியுடன், ⛽பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து 💸ரூ.11.65 கோடி செலவில் தூய்மை மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன👏. அதன்படி கோயிலைச் சுற்றி நவீன மின்னணு கழிப்பறை, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக இரட்டை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன. மேலும் 24 மணி நேரமும் துப்புரவு பணி😳 தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும், கோவிலை சுற்றி பிளாஸ்டிக் பைகளுக்கு தடை, நவீன மண்கூட்டும் எந்திரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது👍.
இதனையடுத்து, 🏛மத்திய அரசின் 🚰குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தால் இந்தியாவின் தூயமையான கோயில் விருதை🏆 மீனாட்சியம்மன் கோயில் பெற்றுள்ளது. இந்த விருதை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பெறுகின்றனர்👏. தூய்மைக்கான 🏆விருது 🔈அறிவிப்பினால் கோயிலைச் சுற்றியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்😯, அவர்களும் இந்த தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டதாக கூறி சந்தோஷப்பட்டனர்😍.
COMMENTS