தேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது-திமுக மனு
ஆர்.கே.நகர் 🗳இடைத்தேர்தலின் தேதியினை போலி வாக்காளர்களை நீக்கும் வரை, அறிவிக்கக் கூடாது🚫, என தலைமை 🗳தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி⚖, சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது😳. ஆர்.கே.நகரில் 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்🚫, என தலைமை தேர்தல் அதிகாரி 👮ராஜேஷ் லக்கானியிடம், கடந்த 23ம் தேதி திமுக சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார்😯. இதுதொடர்பாக 🗳தேர்தல் ஆணையம் எவ்வித முடிவும் எடுக்காததால், 🏛உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்😟. அதில், போலி வாக்காளர்களை நீக்கும் வரை, இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது🚫, என 🗳தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட⚖ வேண்டுமென👍 வலியுறுத்தப்பட்டுள்ளது😯. மேலும், முறைக்கேடு நடக்காமல்😳 இருப்பதற்கு 🗳வாக்காளர் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, மாநகராட்சி 👮அதிகாரிகள் அல்லாத சிறப்பு குழுவை, நியமிக்க வேண்டுமெனவும்👍 அந்த 📜மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது😯.
COMMENTS