5 நாட்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்-டெல்லி அரசு
தலைநகர் 🏛டெல்லியில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசின் அளவு பன்மடங்கு பெருகி வருகிறது😳. இதனால் அங்கு காற்றில் நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளது😱. இதனால் டெல்லி வாசிகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு மற்றும் இருதயக் கோளாறு ஏற்பட்டு வருகிறது😟. இந்த மாசுவை கட்டுப்படுத்த மாநில 🏛அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது😳. இதனையடுத்து காற்று மாசை குறைக்க வரும் நவம்பர் 13 - 17 வரை 5 நாட்களுக்கு 🚗கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது👍. இதனால், பொதுமக்களின் பயண சிரமங்களை குறைக்க டெல்லி அரசு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த 5 நாட்களும் டெல்லி 🏛அரசு சார்பாக இயக்கப்படும் 🚌பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்பட்ட மாட்டாது🚫. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது பயணத்தை இலவசமாக செய்து கொள்ளலாம்👍 என டெல்லி 🚌போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியுள்ளார்😯.
COMMENTS