மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு-புதிய வழிகள் அறிவிப்பு
மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் சிரமங்கள் மக்களை பாதிக்காமல் இருக்க மொபைல் நிறுவனங்களிடம் நடவடிக்கை எடுக்க கோரி அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மொபைல் நிறுவனங்கள் மூன்று புதிய முறைகளை அறிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்துள்ளது.
இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியிருப்பதாவது,"மொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த மூன்று புதிய வழிமுறைகள் மூலம் மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள், டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன. செல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு செய்யும் முறையும் தொடரும்" என்று கூறியுள்ளார். அறிவிக்கப்பட்ட வழிமுறைகள் வருமாறு👇
🔰 ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை
🔰 புதிய மொபைல் ஆப்
🔰 ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை
COMMENTS