சென்னையில் ⛓கைது செய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு நெல்லை நீதிமன்றத்தில் ஜாமீன்
சென்னையில் பிரபல ✍பத்திரிகையாளர் கார்டூனிஸ்ட் பாலா நெல்லை 👮போலீசாரால் ⛓கைது செய்யப்பட்டுள்ளார். 💸கந்து வட்டி கொடுமை என்று கூறி நெல்லை மாவட்ட ஆட்சியர் 🏢அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட இசக்கி முத்துவின் மகன் 😟உயிரிழந்த நிலையில் கிடப்பதை 👮அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை😟 என்பதை தெரிவிக்கும் வகையில் பாலா கடந்த வாரம் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தார்😯. அது முதல்வர் 💺எடப்பாடி உட்பட பல 👮அதிகாரிகளை அவதூறு செய்வது போல் உள்ளது என்று புகார்கள் எழுந்துள்ளது😳. மேலும் அந்த கார்ட்டூன் அருவருக்கத்தக்கதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது😳. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த 👮போலீசார் கார்டூனிஸ்ட் பாலாவை சென்னை பூந்தமல்லி அருகே உள்ள கோவூரில் வைத்து ⛓கைது செய்து அழைத்துச் சென்றனர்😯
இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 501 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 67 ஆகியவற்றின்கீழ் பாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது😯. அதன் பின், நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் 🏛நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்😳. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமதாஸ், கார்ட்டூனிஸ்ட் பாலாவை இருநபர் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்⚖.
COMMENTS