50 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்
திருச்சியில் இருந்து நேற்று இரவு மலேசியா செல்லவிருந்த ஏர் மலிண்டோ விமானத்தில் செல்லவிருந்த பயணிகளிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்து மலேசியாவிற்கு கடத்தவிருந்த 50 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜீம் நாகூர்கான் என்பவர், 80 டிபன் பாக்ஸ்களில் 10 கிலோ எடையுள்ள சூடோஎபிட்ரைன் என்னும் போதை பொருளை வைத்திருந்ததது கண்டறியப்பட்டது. தற்போது அஜீம் நாகூர்கானை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
COMMENTS