ஜி.எஸ்.டி. மூலம் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு-நாடாளுமன்ற அறிக்கை தாக்கல்
ஜிஎஸ்டி மூலம் மறைமுக வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வுசெய்து அறிக்கையாக வழங்கும், பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான பொருளாதார ✍சீர்திருத்தங்களால், வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 7.5 சதவீதம் வரை உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில்கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா மீண்டும்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS