பழுதான வாகனங்களை 15 நாளில் அப்புறப்படுத்தாவிட்டால் பறிமுதல்-சென்னை மாநகராட்சி
🛣சாலைகள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பழுதானவாகனங்களை 📆15 நாட்களுக்குள் அப்புறப்படுத்தாவிட்டால் பறிமுதல் செய்து 💸ஏலம் விடப்படும்😳 என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்⚠. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் 🤵கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜 கூறியிருப்பதாவது, "பொதுமக்களுக்கு இடையூறும் 🚌போக்குவரத்துக்கு பாதிப்பும்😞 ஏற்படும் வகையில், நிறுத்தப்படும் வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும்🙄, பொது சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது😳 என பல்வேறு புகார்கள் பெறப்பட்டு வருகிறது😟. அதனைத் தடுத்திடும்🚫 வகையில் சாலையோரங்கள், 🛣நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள், இவ்வறிவிப்பு🔈 வெளியிடப்பட்ட 📅15 நாட்களுக்குள் உடனடியாக அப்புறப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது🙏. அவ்வாறு குறிப்பிட்ட 📆காலத்திற்குள் அகற்றப்படாத 🚲வாகனங்களை பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர 👮காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்😳. அதை தொடர்ந்து, இந்த 🚗வாகனங்கள் 💸ஏலம் விடப்படும்" என்று எச்சரிக்கை⚠ விடப்பட்டுள்ளது👍.
COMMENTS