2ஜி வழக்கு மேல்முறையீடு-கனிமொழி, ராஜா உள்ளிட்டோருக்கு நோட்டிஸ்
2ஜி மேல்முறையீட்டு வழக்கில் கனிமொழி, ராஜா உள்ளிட்டோருக்கு 📜நோட்டீஸ் அனுப்ப டெல்லி 🏛உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. இந்த வழக்கில்கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த டெல்லி 🏛சி.பி.ஐ. நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 19 பேரை விடுதலை😡 செய்து உத்தரவிட்டது😳. இதற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.யும் டெல்லி 🏛உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன👍. ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் 📺தொலைக்காட்சிக்கு 💸200 கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுவது குறித்த ஆதாரங்கள் சிறப்பு 🏛நீதிமன்றத்தால் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்று மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது✍. இன்று இதனை விசாரித்த நீதிபதிகள், கனிமொழி ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீஸ்📜 அனுப்ப உத்தரவிட்டு⚖, விசாரணையை வரும் 📆25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்😳.
COMMENTS