சென்னையில் 824 கோடி💸 மோசடி செய்த கனிஷ்க் ஜுவல்லரி
🏦14 வங்கிகளில் கடன் வாங்கி 824 கோடி ரூபாய்💸 மோசடி செய்ததாக, கனிஷ்க் ஜூவல்லரி🥇 மற்றும் அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் மீது சி.பி.ஐ.யில்✍ புகார் அளிக்கப்பட்டுள்ளது. 🏙சென்னையில் இயங்கி வரும் கனிஷ்க் கோல்ட் நிறுவனத்தின் சார்பில், சென்னை மட்டுமின்றி, ஐதராபாத்🌇, கொச்சின், மும்பை ஆகிய இடங்களில் கிரிஷ் ஜூவல்லரி🥇 என்ற பெயரில் நகைக்கடைகள் தொடங்கப்பட்டன😯. கடந்த ஆண்டு செப்டம்பரில்🗓 கனிஷ்க் கோல்டு நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின்👤, சுமார் 20 கோடி வரி மோசடி செய்ததற்காக கைது⛓ செய்யப்பட்டார். இதனை அடுத்து, நாட்டின் சில முக்கிய வங்கிகளான🏦 எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் வாங்கி சுமார் 824 கோடியே💸 15 லட்சம் மோசடி செய்துள்ளதாக சி.பி.ஐ.யில்✍ புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது😯.
COMMENTS