தினம் ஒரு கதை
நீங்களும் இப்படி பாகுபாடு பார்ப்பவரா
ஒரு காட்டில் ஒரு பஞ்சவர்ணக் கிளியும், காகமும் வாழ்ந்து வந்தன. அந்த கிளியோ எப்போது பார்த்தாலும் காகத்தைப் பார்த்து 'கறுப்பா, கறுப்பா" என அழைத்து அவமதித்தது. அதற்கு காகம் வருத்தத்துடன் கடவுள் என்னைப் படைக்கும்போது மின்சாரம் இல்லாமல் இருட்டாக இருந்ததோ... என்னவோ... அதற்கு நான் என்ன செய்ய? என்று சலித்துக் கொண்டது.
ஒருநாள், அந்த காட்டிற்கு வந்த ஒரு வேட்டைக்காரர் மரத்தின் மீது அமர்ந்திருந்த பல வண்ணங்களால் ஆன கிளியை சிறைப்பிடித்து, வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். அச்சமயம் காகமோ 'நல்ல வேளை நான் கறுப்பாக உள்ளேன்" எனப் பெருமைப்பட்டது. இருந்தாலும், இத்தனை நாட்கள் கிளியிடம் பழகிவிட்டோமே என்று நினைத்து, வேட்டைக்காரரைத் தொடர்ந்து சென்று கண்காணித்தது.
கிளியை, வேட்டைக்காரர் கூண்டில் அடைத்து பேச வைப்பதற்காக அதனை பாடாய்படுத்திக் கொண்டிருந்தார். வசம்பை சுட்டுக் கிளியின் நாக்கில் வைத்து கிளியை பேச வைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். கிளியோ வலி தாங்க முடியாமல் அலறியது. இதைப் பார்த்த காகம் மனம் வருத்தமுற்றது.
அன்று அமாவாசை நாள் என்பதால் வேட்டைக்காரரின் மனைவி வாசல் சுவரில் படையல் சோறு வைத்து 'கா... கா... கா..." எனக் கூவி காகத்தை அழைத்தார். அப்போது அங்கு வந்த காகம், சிலிர்த்துக் கொண்டவாறு கிளியைப் பார்த்து கிளியே பார்த்தாயா? அவர்கள் மொழியில் உன்னைப் பேச வைக்க வேட்டைக்காரர் சூடு வைக்கிறார். ஆனால், அவரது மனைவி என் மொழியில் என்னை கூவிக் கூப்பிட்டு எனக்கு சோறு வைக்கிறார் என்று கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தது.
பிறகு கொஞ்ச நேரம் கழித்து, யாரும் இல்லாத நேரம் பார்த்து கிளியின் கூண்டைத் திறந்துவிட்டு, 'நண்பா வெளியே வா" என அழைத்தது. கிளியும் வெளியேறி வந்தது. இரண்டும் காட்டை நோக்கிப் பறந்தன. அப்போது கிளி காகத்தை நோக்கி, நண்பா! என்னை மன்னித்து விடு. நான் அறியாமல் நிறப் பாகுபாடு பார்த்து உன்னை மனம் நோகச் செய்துவிட்டேன். இனிமேல் இதுபோல் பாகுபாடு பார்க்க மாட்டேன் என்று மனதார வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டது.
நீங்களும் இப்படி பாகுபாடு பார்ப்பவரா
ஒரு காட்டில் ஒரு பஞ்சவர்ணக் கிளியும், காகமும் வாழ்ந்து வந்தன. அந்த கிளியோ எப்போது பார்த்தாலும் காகத்தைப் பார்த்து 'கறுப்பா, கறுப்பா" என அழைத்து அவமதித்தது. அதற்கு காகம் வருத்தத்துடன் கடவுள் என்னைப் படைக்கும்போது மின்சாரம் இல்லாமல் இருட்டாக இருந்ததோ... என்னவோ... அதற்கு நான் என்ன செய்ய? என்று சலித்துக் கொண்டது.
ஒருநாள், அந்த காட்டிற்கு வந்த ஒரு வேட்டைக்காரர் மரத்தின் மீது அமர்ந்திருந்த பல வண்ணங்களால் ஆன கிளியை சிறைப்பிடித்து, வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். அச்சமயம் காகமோ 'நல்ல வேளை நான் கறுப்பாக உள்ளேன்" எனப் பெருமைப்பட்டது. இருந்தாலும், இத்தனை நாட்கள் கிளியிடம் பழகிவிட்டோமே என்று நினைத்து, வேட்டைக்காரரைத் தொடர்ந்து சென்று கண்காணித்தது.
கிளியை, வேட்டைக்காரர் கூண்டில் அடைத்து பேச வைப்பதற்காக அதனை பாடாய்படுத்திக் கொண்டிருந்தார். வசம்பை சுட்டுக் கிளியின் நாக்கில் வைத்து கிளியை பேச வைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். கிளியோ வலி தாங்க முடியாமல் அலறியது. இதைப் பார்த்த காகம் மனம் வருத்தமுற்றது.
அன்று அமாவாசை நாள் என்பதால் வேட்டைக்காரரின் மனைவி வாசல் சுவரில் படையல் சோறு வைத்து 'கா... கா... கா..." எனக் கூவி காகத்தை அழைத்தார். அப்போது அங்கு வந்த காகம், சிலிர்த்துக் கொண்டவாறு கிளியைப் பார்த்து கிளியே பார்த்தாயா? அவர்கள் மொழியில் உன்னைப் பேச வைக்க வேட்டைக்காரர் சூடு வைக்கிறார். ஆனால், அவரது மனைவி என் மொழியில் என்னை கூவிக் கூப்பிட்டு எனக்கு சோறு வைக்கிறார் என்று கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தது.
பிறகு கொஞ்ச நேரம் கழித்து, யாரும் இல்லாத நேரம் பார்த்து கிளியின் கூண்டைத் திறந்துவிட்டு, 'நண்பா வெளியே வா" என அழைத்தது. கிளியும் வெளியேறி வந்தது. இரண்டும் காட்டை நோக்கிப் பறந்தன. அப்போது கிளி காகத்தை நோக்கி, நண்பா! என்னை மன்னித்து விடு. நான் அறியாமல் நிறப் பாகுபாடு பார்த்து உன்னை மனம் நோகச் செய்துவிட்டேன். இனிமேல் இதுபோல் பாகுபாடு பார்க்க மாட்டேன் என்று மனதார வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டது.
COMMENTS