காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை
காலிஃபிளவரில் பக்கோடா, குருமா, பூரி, புலாவ் என விதவிதமாக சமைக்கலாம். இப்போது இந்த காலிஃபிளவரை பயன்படுத்தி காலிஃப்ளவர் சில்லி ப்ரை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 2
உருளைக்கிழங்கு - அரை கிலோ
தக்காளி - அரை கிலோ
பச்சைமிளகாய் - 10
இஞ்சி, பு+ண்டு விழுது - 2 ஸ்பு+ன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பு+ன்
பெரிய வெங்காயம் - 6
பட்டை - சிறிய துண்டு (பொடித்தது)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
:tulip: காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை செய்வதற்கு முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
:tulip: அடுத்து காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு, அதில் உப்பு, மஞ்சள் தூள், பொடித்த பட்டை தூள் ஆகியவற்றையும் சேர்த்து, அரை பதத்திற்கு வேக வைத்துக்கொள்ளவும்.
:tulip: பின்பு உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டங்களாக நறுக்கி, அதன்மேல் சிறிதளவு உப்பு போட்டு பிரட்டி, எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
:tulip: அதே வாணலியில் மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பு+ண்டு விழுது, பச்சை மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன், வேக வைத்துள்ள காலிஃப்ளவரையும் போட்டு கிளறி, அதனுடன் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைத்து இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் சில்லி ப்ரை தயார்.
COMMENTS