உலக நுகர்வோர் உரிமைகள் தினம்: நமது உரிமையை இழக்க வேண்டாம்!
உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
⚖ நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ஆம் தேதி, உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது, அதன்மீது நடவடிக்கை எடுத்தல், சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
⚖ இத்தினம் அனைத்துலக நுகர்வோர் அமைப்பின் சார்பில் அனுசரிக்கப்படும் தினமாகும். 1962ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜான் கென்னடி உலக நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
⚖ அவ்வேளையில் நுகர்வோர் உரிமைகளுக்கான மசோதா பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச நுகர்வோருக்கான அடிப்படை உரிமைகளைப் பெற இந்த மசோதா வழிவகுத்தது. இதனை குறிப்பிடும் வகையில், இத்தினம் 1983ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
பால் ஹெயிஸ்

✍ உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான பால் ஹெயிஸ் 1830ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு அருகே உள்ள ஹெலிகெய்ஸ்ட் என்ற இடத்தில் பிறந்தார்.
✍ இவர் பிரபல இலக்கியவாதிகளை சந்தித்த பிறகு இவரது முதல் கவிதை 1848-ல் வெளியானது. சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய இவரது முதல் நூலை இவரது தந்தை வெளியிட்டார்.
✍ 1867-ம் ஆண்டு தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளில் ஏராளமாக எழுதிக் குவித்தார். இவரது புகழ் மெல்ல மெல்லப் பரவி உலகம் முழுவதும் பிரபலமானார். ஏராளமான கவிதைகள், 120 நாவல்கள், 177 சிறுகதைகள், 60 நாடகங்களை எழுதியுள்ளார்.
✍ 'தி ஃப்யூரி" சிறுகதை இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இவர் எழுத்தாளர்கள் அனைவரையும் இணைத ;து 'டை குரோகடைல்" என்ற இலக்கிய அமைப்பை தொடங்கினார்.
✍ இலக்கியத்தின் பல்வேறு களங்களிலும் முத்திரை பதித்த இவருக்கு 1910-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
✍ சிறந்த இலக்கியவாதியும், ஜெர்மனியின் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பால் ஹெயிஸ் தனது 84-வது வயதில் (1914) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
💻 1985ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதலாவது இணைய டொமைன் பெயர் (.உழஅ) அறிமுகப்படுத்தப்பட்டது.
ழூ இன்றைய வரலாற்று நிகழ்வுகளை Pனுகு வடிவிலும், மற்றவர்களுக்கு ளாயசந செய்யும் வகையிலும் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
COMMENTS