சிறுகீரை எப்படி பயிரிடுவது
*பருவம் *
🍂 சித்திரை, ஆடி, மார்கழி, "மாசிப்பட்டம்" ஏற்ற பருவம் ஆகும். இதனை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.
மண்
🍂 நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம், செம்மண் நிலம் உகந்தது. அதிக களிமண் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும்.
விதையளவு
🍂 ஒரு எக்டருக்கு சாகுபடி செய்ய 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
🍂 தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
🍂 கீரை விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். அப்பொழுது தான் விதைகள் சீராக விழுந்து முளைக்கும். பின் கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
🍂 விதைகளை விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும். வாய்க்கால் பாசனமாக இருந்தால் கவனமாக நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
🍂 இக்கீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும். நிழல் பகுதியாக இருக்க கூடாது. அதிக வெளிச்சம் தேவைப்படும்.
உரங்கள்
🍂 ஜீவாமிர்தக் கரைசலை 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.!
COMMENTS