பயணச்சீட்டு அச்சிடுவதில் முறைகேடு-ஒரே சீரியல் 🔢எண்ணில் பல டிக்கட்டுகள்
விழுப்புரம் 🏛அரசுப் 🚌போக்குவரத்துக் கழகத்தில், ஒரே சீரியல் 🔢எண் கொண்ட டிக்கெட்டுகளை பயணிகளிடம் புழக்கத்தில் விடப்பட்டது அம்பலமாகியுள்ளது😳. கடந்த 14ம் தேதி செஞ்சி அரசுப் போக்குவரத்து பணிமணையில் இருந்து விழுப்புரம் புறப்பட்ட பேருந்து ஒன்றை நடுவழியில் நிறுத்திய பயணச்சீட்டு பரிசோதகர்கள் பேருந்தில் ஏறி பரிசோதித்துள்ளனர்👍. அப்போது பயணிகள் வைத்திருந்த இரண்டு ரூபாய் டிக்கெட்டுகள் ஓரே சீரியல் எண் கொண்டதாக இருந்துள்ளது😱. ஓட்டுநர் வைத்திருந்த கட்டிலும் ஒரே எண் இருந்துள்ளது. இதுகுறித்து செஞ்சி பணிமணை கிளை மேலாளர், பயணச்சீட்டுகளை வழங்கும் அலுவலர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது, 🚌பேருந்து 💸கட்டணத்தை உயர்த்தியபோது அவசர அவசரமாக புறநகரப் பயணச்சீட்டுகள் அச்சடித்ததில் நடைபெற்ற அச்சுப்பிழையால் இப்படி நடைபெற்றுள்ளது🙄 என்று 👮அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே 🏛அரசுப் போக்குவரத்துக்கு புதிய 🚌பேருந்துகள் வாங்குவதில் 💸ரூ.300 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், தற்போது பயணச்சீட்டு அச்சிடுவதிலும் 💸ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது😯. மேலும், இனி பயணச்சீட்டு அச்சிடும் பணி ஆளுங்கட்சி பிரமுகர்களின் மேற்பார்வையின் கீழ், தனியார் அச்சகத்தில்தான் நடைபெறுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்😯. ஏற்கனவே இதே கழகத்தில் பயணச்சீட்டு அச்சிடுவதில் முறைகேடு😳 நடைபெற்று சம்பந்தப்பட்ட 👮அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS