வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
*இதன் காரணாக இன்று வருமான வரி அலுவலகங்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் வசதிக்காக வருமான வரித்துறை அலுவலகங்கள் கடந்த இரண்டு நாட்களாக இயங்கி வருகின்றன.*
*இதே போல் வங்கிகளும் இன்று இரவு 8 மணி வரை இயங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி போன்ற அரசு விடுமுறை நாட்களை அடுத்து சனி, ஞாயிறு ஆகிய நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.*
*மேலும் ஏப்ரல் 2ம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடியும் நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் விடுமுறையால் மக்களுக்குப் பணபரிவர்த்தனைகளில் சிக்கல் நீடிக்கக்கூடாது என்பதற்காக இன்று இரவு வரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*
COMMENTS