தனியார்
பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும்
மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்
தனியார்
பள்ளிகளைப் போல, அரசுப் பள்ளிகளிலும்
மாணவர்களின் உடை, முடி உள்ளிட்ட
பல விஷயங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன👍. இதையடுத்து,
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்கத்துடன் செயல்படவே இந்த விதிமுறைகள் என்றும்,
இதனை மீறினால் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும்
கூறப்பட்டுள்ளது.
இதோ அந்த கட்டுப்பாடுகளின்
விவரங்கள்
🔰 காலை 9.15 மணிக்கெல்லாம்
பள்ளிக்கு வரவேண்டும்.
🔰 மாணவர்கள் லோ-ஹிப் பேன்ட் அணியக்கூடாது.
🔰 நீளமான அரைக்கை
சட்டையையே மாணவர்கள் அணிய வேண்டும், அதை
மாணவர்கள் டக்-இன் செய்ய
வேண்டும்.
🔰 கருப்பு நிற
பக்குளை உடைய பெல்ட்டையே மாணவர்கள்
அணிய வேண்டும்.
🔰 தங்கள் முடியை
‘போலீஸ் கட்’ செய்து கொண்டே
பள்ளிக்கு வரவேண்டும்.
🔰 மாணவர்கள் மீசை
பெரிதாக இருக்கக்கூடாது. முறுக்கு மீசை வைக்கக்கூடாது.
🔰 கைகளில் ரப்பர்
பேண்ட், செயின், பிரேஸ்லெட் மற்றும்
காதுகளில் தோடு உள்ளிட்டவற்றை அணியக்
கூடாது.
🔰 பெற்றோர் கையெழுத்திட்ட
விடுப்பு கடிதத்ததை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து, அவர்களிடம் அனுமதி பெற்ற பின்பே
விடுமுறை எடுக்க முடியும்.
🔰 மாணவர்கள் தங்கள்
பிறந்தநாளின் போதும், பள்ளி சீருடையிலேயே
பள்ளிக்கு வரவேண்டும்.
🔰மாணவர்கள் மொபைல்
போன், பைக் உள்ளிட்டவற்றை பள்ளிக்கு
கொண்டு வரக்கூடாது.
🔰 நகங்களை முறையாக
வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும்.
COMMENTS