1.12 லட்சம் சிறார்கள் மாயம் : ஆய்வில், 'திடுக்' தகவல்
நாடு முழுவதும், 1.12 லட்சம் சிறார்கள் வீட்டை விட்டு மாயமாகி உள்ளதாக, தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'ரயில்வே சில்ரன்ஸ்' என்ற தனியார் தொண்டு நிறுவனம், வீட்டை விட்டு வெளியேறும் சிறார்கள் குறித்து, நாடு முழுவதும் உள்ள, 35 பெரிய ரயில் நிலையங்களில், ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கை, சென்னையில் வெளியிடப்பட்டது.
ஆய்வறிக்கையை வெளியிட்டு, 'யுனிசெப்' அமைப்பின், குழந்தைகள் நல பாதுகாப்பு சங்க முன்னாள் உறுப்பினர், வித்யாசாகர் கூறியதாவது: இந்தியாவில், ஆண்டுக்கு, 1.12 லட்சம் சிறார்கள், வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இதில், ஆண் குழந்தைகள் அதிகம். சிதறுண்ட குடும்பங்கள், குடும்ப வன்முறை, குடும்ப உறுப்பினர்களின் போதை பழக்கங்கள் போன்ற காரணங்களால், சிறார்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். வீட்டை விட்டு வெளியேறுவோரில், 13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த சிறார்கள் அதிகம் என, தெரிய வந்துள்ளது.சென்னை போன்ற பெரிய நகரங்களில், குடிசை பகுதிகளில் வசிக்கும் சிறார்கள், வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
எழும்பூர், விழுப்புரம், காட்பாடி போன்ற ரயில் நிலையங்களில், ஆண்டுக்கு, 5,000 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டு, குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டாலும், ஏராளமானோர் மீண்டும் வெளியேறி விடுகின்றனர். சிறார்கள் காணாமல் போனது குறித்து, 1 சதவீதத்துக்கு குறைவாகவே, காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுவதும், 1.12 லட்சம் சிறார்கள் வீட்டை விட்டு மாயமாகி உள்ளதாக, தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'ரயில்வே சில்ரன்ஸ்' என்ற தனியார் தொண்டு நிறுவனம், வீட்டை விட்டு வெளியேறும் சிறார்கள் குறித்து, நாடு முழுவதும் உள்ள, 35 பெரிய ரயில் நிலையங்களில், ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கை, சென்னையில் வெளியிடப்பட்டது.
ஆய்வறிக்கையை வெளியிட்டு, 'யுனிசெப்' அமைப்பின், குழந்தைகள் நல பாதுகாப்பு சங்க முன்னாள் உறுப்பினர், வித்யாசாகர் கூறியதாவது: இந்தியாவில், ஆண்டுக்கு, 1.12 லட்சம் சிறார்கள், வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இதில், ஆண் குழந்தைகள் அதிகம். சிதறுண்ட குடும்பங்கள், குடும்ப வன்முறை, குடும்ப உறுப்பினர்களின் போதை பழக்கங்கள் போன்ற காரணங்களால், சிறார்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். வீட்டை விட்டு வெளியேறுவோரில், 13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த சிறார்கள் அதிகம் என, தெரிய வந்துள்ளது.சென்னை போன்ற பெரிய நகரங்களில், குடிசை பகுதிகளில் வசிக்கும் சிறார்கள், வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
எழும்பூர், விழுப்புரம், காட்பாடி போன்ற ரயில் நிலையங்களில், ஆண்டுக்கு, 5,000 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டு, குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டாலும், ஏராளமானோர் மீண்டும் வெளியேறி விடுகின்றனர். சிறார்கள் காணாமல் போனது குறித்து, 1 சதவீதத்துக்கு குறைவாகவே, காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
COMMENTS