சென்னையில்
12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-18 பேர்
கைது
சென்னையில்
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த
வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரும்
நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். சென்னை அயனாவரத்தில் உள்ள
பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான 👂காது கேட்கும் திறன்
குறைபாடு உள்ள சிறுமி 7ம்
வகுப்பு படிக்கிறார். அந்த மாணவி, ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு
அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
வெகுளித்தனமாக இருக்கும் அந்த சிறுமியை ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள்
4 பேர் முதலில் அந்த சிறுமியை
பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கத்தியை காட்டி மிரட்டியதால்
அந்த சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து, குடியிருப்பில் காவல் பணிக்கு வரும்
காவலாளிகள், பிளம்பர்கள் என அங்கு வேலை
பார்க்கும் நபர்களின் பிடியிலும் சிக்கியுள்ளார். சுமார் 7 மாத காலமாக இந்த
கொடுமை நீடித்துள்ளது.
இந்நிலையில்,
வெளியூரில் பட்டப்படிப்பு படித்து அந்த சிறுமியின்
சகோதரி நேற்று முன்தினம் சென்னை
வந்துள்ளார். அவரிடம் இந்த சிறுமி
இது குறித்து கூற, விஷயம் பெற்றோர்களுக்கு
தெரிய வந்து போலீசில் புகார்
அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை
நடத்திய போலீசார் 18 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ்
வழக்குப்பதிவு செய்த போலீஸ், அவர்களை
இன்று சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில்
ஆஜர்படுத்தப்படுத்தினார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS