இன்றைய
திருக்குறள் :
calendar:17/07/2018
குறள்:
417
பிழைத்துணர்ந்தும்
பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
அதிகாரம்:
42
கேள்வி
சாலமன்
பாப்பையா உரை:
நுண்ணிதாக
ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர்,
பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.
மு. வரதராசனார் உரை:
நுட்பமாக
உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர்,
( ஒரு கால் பொருள்களைத்) தவறாக
உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.*
மு. கருணாநிதி உரை:
எதையும்
நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள்,
சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும்
கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.
COMMENTS