ஆடி 18ஐ ஆனி மாதத்திலே கொண்டாடிய திருச்சி சமூக ஆர்வலர்கள்!
காவிரி தாயை வரவேற்க பல சமூக அமைப்புகள் சேர்ந்து காவிரி அம்மாமண்டபம் படித்துரையை தூய்மைப்படுத்தினர்!
வரலாற்று சிறப்புமிக்க திருச்சி காவிரி அம்மாமண்டபம் படித்துறை, திருச்சியின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. பல்லாயிரகணக்கான பக்தர்கள், பொதுமக்கள் தினமும் இப்படித்துறையில் புனித நீராடி செல்கின்றனர். பல வருடங்களுக்கு பின்னர் ஜூலை மாதத்திலே மேட்டூர் அணை 90 அடியை எட்டவுள்ளது. சில நாட்களில் மேட்டூரில் இருந்து திறந்துவிடும் தண்ணீர் திருச்சியை வந்துசேர இருக்கும் நிலையில்,250க்கும் அதிகமான திருச்சி மக்கள் சமூக அமைப்புகள், மாநகராட்சி உதவியுடன் காவிரி அம்மாமண்டபம் படித்துறையை தூய்மைப்படுத்தினர்.
காலை 6 மணிக்கு துவங்கி 9 மணி வரை தூய்மை பணி நடைபெற்றது. திருச்சி மாவட்ட அமைச்சர்கள் மாண்புமிகு திரு.வெல்லமண்டி நடராஜன், மாண்புமிகு திருமதி.வளர்மதி மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு.ரவிச்சந்திரன் தூய்மை பணியை தொடங்கிவைத்து பங்குபெற்றனர். இளைஞர்கள் நதியை தூய்மைப்படுத்த, பள்ளிக்குழந்தைகள் விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தி மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அம்மாமண்டபத்தை சீரமைப்பதற்காக பல லட்சங்களை மாநகராட்சி ஒதுக்கி இருக்கும் நிலையில், அதை தூய்மைப்படுத்த அரசுடன் மக்களும் இனைந்து களப்பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலில் 12ஆம் இடத்தில் திருச்சி இருக்கும் நிலையில், மாநகராட்சி மற்றும் அரசுடன் பொது மக்களும் இணைந்து முயற்சி செய்தால் கண்டிப்பாக திருச்சியை முதல் இடத்திற்கு கொண்டு சேர்க்க முடியும்.
காவிரி தாயை வரவேற்க பல சமூக அமைப்புகள் சேர்ந்து காவிரி அம்மாமண்டபம் படித்துரையை தூய்மைப்படுத்தினர்!
வரலாற்று சிறப்புமிக்க திருச்சி காவிரி அம்மாமண்டபம் படித்துறை, திருச்சியின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. பல்லாயிரகணக்கான பக்தர்கள், பொதுமக்கள் தினமும் இப்படித்துறையில் புனித நீராடி செல்கின்றனர். பல வருடங்களுக்கு பின்னர் ஜூலை மாதத்திலே மேட்டூர் அணை 90 அடியை எட்டவுள்ளது. சில நாட்களில் மேட்டூரில் இருந்து திறந்துவிடும் தண்ணீர் திருச்சியை வந்துசேர இருக்கும் நிலையில்,250க்கும் அதிகமான திருச்சி மக்கள் சமூக அமைப்புகள், மாநகராட்சி உதவியுடன் காவிரி அம்மாமண்டபம் படித்துறையை தூய்மைப்படுத்தினர்.
காலை 6 மணிக்கு துவங்கி 9 மணி வரை தூய்மை பணி நடைபெற்றது. திருச்சி மாவட்ட அமைச்சர்கள் மாண்புமிகு திரு.வெல்லமண்டி நடராஜன், மாண்புமிகு திருமதி.வளர்மதி மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு.ரவிச்சந்திரன் தூய்மை பணியை தொடங்கிவைத்து பங்குபெற்றனர். இளைஞர்கள் நதியை தூய்மைப்படுத்த, பள்ளிக்குழந்தைகள் விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தி மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அம்மாமண்டபத்தை சீரமைப்பதற்காக பல லட்சங்களை மாநகராட்சி ஒதுக்கி இருக்கும் நிலையில், அதை தூய்மைப்படுத்த அரசுடன் மக்களும் இனைந்து களப்பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலில் 12ஆம் இடத்தில் திருச்சி இருக்கும் நிலையில், மாநகராட்சி மற்றும் அரசுடன் பொது மக்களும் இணைந்து முயற்சி செய்தால் கண்டிப்பாக திருச்சியை முதல் இடத்திற்கு கொண்டு சேர்க்க முடியும்.
COMMENTS