பெங்களூரு வானில் 'திக்திக்'... 2 இண்டிகோ விமானங்கள் மோதல் தவிர்ப்பு!
கடந்த 10ஆம் தேதி பெங்களூரு வானில் 2 இண்டிகோ விமானங்கள் மோதவிருந்த சம்பவம் தவிர்க்கப்பட்டது. கோவை-பெங்களூரு விமானமும், பெங்களூரு-கொச்சி விமானமும் கிட்டத்தட்ட ஒரே உயரத்தில் பறந்து கொண்டிருந்ததை நவீன தொழில்நுட்பமான டி.சி.ஏ.எஸ். அமைப்பு கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ஒரு விமானம் 200 அடிக்குக் கீழ் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
COMMENTS