கபினி அணை-நீர்திறப்பு 39 ஆயிரம் கன அடியாக உயர்வு
☔பருவமழை நீடித்து வருவதால் 🌊கபிலா, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன😳. கபினி அணை நிரம்ப ஒரு அடி மட்டுமே இருப்பதால், அணையிலிருந்து 💦35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் ☔தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது⏫. அணையின் மொத்த கொள்ளளவான 124 புள்ளி 80 அடியில், தற்போது 110 அடியை தாண்டி 🌊நீர்மட்டம் உள்ளது. கனமழை தொடர்வதால்🙄 அணையில் இருந்து ⏱வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது👍. இதனால், 🏛தமிழ்நாட்டிற்கு வரும் 🌊காவிரியாற்றில், ⏱வினாடிக்கு 39 ஆயிரம் கன அடி 🌊தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது👏.
COMMENTS