திருச்சி 'ஸ்மார்ச் சிட்டி' திட்டம்-ரூ.53 கோடி மதிப்பிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல்
நாடு முழுவதும் 🌌ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் நகரங்களின் 📜பட்டியலில் திருச்சியும் இடம்பிடித்துள்ளது👍. இதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன😯. அவற்றில் பெரும்பாலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத 🌳பசுமை திட்டங்களாக இருக்கின்றன. இந்நிலையில் பகுதி சார்ந்த மேம்பாடு அடிப்படையில் ராக்போர்ட், விண்டேஜ் திருச்சி ஆகியவற்றில் வரலாற்று சிறப்பிடங்கள் உட்பட 6 பகுதிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன😐. இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் 🤵என்.ரவிச்சந்திரன் கூறியுள்ளதாவது🎙, 'அடுத்த 3 மாதங்களில் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கான திட்ட அடித்தளப் பணிகள் தொடங்கப்படும்👏' என்று தெரிவித்துள்ளார்🔈.
திருச்சியில் மேற்கொள்ளப்படும் சுற்றுலாத் துறை சார்ந்த செயல்பாடுகளுக்கு 💸ரூ.53.52 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 💸நிதித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மூத்த 👮அதிகாரிகள் குழு ✍அனுமதி அளித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்த ✍ஒப்பந்ததாரர்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை🗣 நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது🔈.
COMMENTS