காவிரியில் 54 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்துவிட்டது கர்நாடகா
🔹🔸காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டதால், தமிழகத்திற்கு 54 ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
🔹🔸கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அந்த மாநில அணைகளில் அனைத்தும் நிரம்பியுள்ளன. கபினி அணையில் உச்சகட்ட நீர்தேக்கும் அளவான 84 அடியில், தற்போது 83 புள்ளி 5 அடிக்கு தண்ணீர் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வருகிறது.
🔹🔸இதற்கு மேல் தேக்கி வைக்க முடியாது என்பதால் அணைக்கு வரும் தண்ணீர் மொத்தமும் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 53 ஆயிரத்து 657 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
🔹🔸ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூர காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்தல், துணிதுவைத்தல் உள்ளிட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔹🔸மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கன மழை காரணமாக கோவை மாவட்டம் சிறுவாணி அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியுள்ளது. அணையின் மொத்த உயரமான 50 அடியை நீர்மட்டம் தொட்டுள்ளது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் மொத்தமும் திறந்து விடப்பட்டுள்ளது
COMMENTS