மலையில் இருந்து காருடன் விழுந்த பெண்; 7 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு....
கலிபோர்னியா : அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தின் போர்ட்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஏஞ்செலா ஹெர்னான்டெஜ், 23. இவர் ஜூலை 7ம் தேதி லாஞ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள லேன்காஸ்டர் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு காரில் பயணம் செய்தார். கலிபோர்னியாவின் கடற்கரையை ஒட்டிய மலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் குறுக்கே சென்ற விலங்கின் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக, காரை திருப்பியுள்ளார். எதிர்பாராத விதமாக கார், மலையில் இருந்து கவிழ்ந்துகீழே பள்ளத்தில் விழுந்தது. சம்பவம் நடந்து ஏழு நாட்களுக்குப்பின் அவ்வழியே நடந்து சென்றவர்கள், சேதமடைந்தகார் ஒன்று மலை அடிவாரத்தில் கிடப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அங்கு சென்ற அவர்கள், காருக்குள் காயத்துடன் போராடிக்கொண்டிருந்த ஏஞ்செலாவை மீட்டு, ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவரது சகோதரி இசபெல் பேஸ்புக் பக்கத்தில், '' 200 அடி பள்ளத்தில்காருக்குள் சிக்கியிருந்து எனது சகோதரி, கடந்த ஏழு நாட்களாக, காரின் ரேடியேட்டரில் உள்ள நீரை, குடிநீராக குடித்து உயிர் வாழ்ந்துள்ளார். தற்போதுசிகிச்சையில் உள்ள அவர், மெதுவாக குணமடைந்து வருகிறார்'' என தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா : அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தின் போர்ட்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஏஞ்செலா ஹெர்னான்டெஜ், 23. இவர் ஜூலை 7ம் தேதி லாஞ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள லேன்காஸ்டர் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு காரில் பயணம் செய்தார். கலிபோர்னியாவின் கடற்கரையை ஒட்டிய மலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் குறுக்கே சென்ற விலங்கின் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக, காரை திருப்பியுள்ளார். எதிர்பாராத விதமாக கார், மலையில் இருந்து கவிழ்ந்துகீழே பள்ளத்தில் விழுந்தது. சம்பவம் நடந்து ஏழு நாட்களுக்குப்பின் அவ்வழியே நடந்து சென்றவர்கள், சேதமடைந்தகார் ஒன்று மலை அடிவாரத்தில் கிடப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அங்கு சென்ற அவர்கள், காருக்குள் காயத்துடன் போராடிக்கொண்டிருந்த ஏஞ்செலாவை மீட்டு, ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவரது சகோதரி இசபெல் பேஸ்புக் பக்கத்தில், '' 200 அடி பள்ளத்தில்காருக்குள் சிக்கியிருந்து எனது சகோதரி, கடந்த ஏழு நாட்களாக, காரின் ரேடியேட்டரில் உள்ள நீரை, குடிநீராக குடித்து உயிர் வாழ்ந்துள்ளார். தற்போதுசிகிச்சையில் உள்ள அவர், மெதுவாக குணமடைந்து வருகிறார்'' என தெரிவித்துள்ளார்.
COMMENTS