95 அடி நீர்மட்டத்தை எட்டியது மேட்டூர் அணை
கர்நாடகாவில் தொடரும் கனமழை எதிரொலி காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 90000 கனஅடியில் இருந்து ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டி, தற்போது நீர்மட்டம் 95.73 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 59.44 டி.எம்.சி.,யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் தொடரும் கனமழை எதிரொலி காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 90000 கனஅடியில் இருந்து ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டி, தற்போது நீர்மட்டம் 95.73 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 59.44 டி.எம்.சி.,யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
COMMENTS