தாய்மொழி கட்டாய பாடம் : துணை ஜனாதிபதி வலியுறுத்தல்
அனைத்து மாநில அரசுகளும், அந்தந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் தங்களது தாய்மொழியை கட்டாயமாக கற்பிப்பதைஉறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என துணை ஜனாதிபதி கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது: கலாசாரம், மதிப்பு, பாரம்பரியத்தை உள்ளடக்கியதாக தாய்மொழி திகழ்கிறது. நாம், பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். மூத்தவர்களையும், ஆசிரியர்களையும் மதிப்பவர்கள். அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுபவர்கள். இயற்கைக்கு மரியாதை அளிப்பது ஒவ்வொரு இந்தியனின் டிஎன்ஏவில் உள்ளது. ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்பிக்கலாம். ஆனால், தாய்மொழியை புறக்கணிக்கக்கூடாது என்றார்.
அனைத்து மாநில அரசுகளும், அந்தந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் தங்களது தாய்மொழியை கட்டாயமாக கற்பிப்பதைஉறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என துணை ஜனாதிபதி கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது: கலாசாரம், மதிப்பு, பாரம்பரியத்தை உள்ளடக்கியதாக தாய்மொழி திகழ்கிறது. நாம், பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். மூத்தவர்களையும், ஆசிரியர்களையும் மதிப்பவர்கள். அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுபவர்கள். இயற்கைக்கு மரியாதை அளிப்பது ஒவ்வொரு இந்தியனின் டிஎன்ஏவில் உள்ளது. ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்பிக்கலாம். ஆனால், தாய்மொழியை புறக்கணிக்கக்கூடாது என்றார்.
COMMENTS