புதுடில்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் விவரங்களை இந்தியா பாகிஸ்தான் பரிமாறிக்கொண்டது.
*இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது: கடந்த 2008-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி இருநாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி1-ம் தேதி மற்றும் ஜூலை 1-ம் தேதி என ஆண்டிற்கு இருமுறை என இருநாட்டின் சிறைகளில் உள்ள கைதிகளின் விவரங்களை பரிமாறிக்கொள்கின்றன. தற்போது ஜூலை 1-ல் இந்த விவரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.*
*இதன்படி எல்லை தாண்டி செல்லுதல் மற்றும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டவர்கள் என இந்தியாவை சேர்ந்த பொதுமக்கள் 53 பேர் மீனவர்கள் 418 பேர் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பாகிஸ்தானை சேர்ந்த பொதுமக்கள் 249 பேர் மற்றும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 108 மீனவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.*
COMMENTS