ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்...
சென்னை: மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோட்டு ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கின்றனர் என சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:வரி ஏய்ப்பு சோதனை தான் முட்டை நிறுவனத்தில் நடந்துள்ளது. இது வருமானவரி நடவடிக்கை. மொட்டைக்கும் முழங்காலும் முடிச்சுபோட்டு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கின்றனர்.
கச்சத்தீவு தி.மு.க., ஆட்சியில் தான் தாரை வார்க்கப்பட்டது. மீனவர் பிரச்னைக்கு கச்சத்தீவு மீட்பு தான் தீர்வு என கருதிய ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நடந்து வருகிறது. சி.ஏ.ஜி. அறிக்கையை வைத்து ஸ்டாலின் பேசுகிறார். இது போல அவர்களது ஆட்சியில் ஏராளமான சி.ஏ.ஜி. அறிக்கை உள்ளன. மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தகுந்த பதில் அளிப்போம். கோயில் சொத்துகள் கொள்ளை, சிலை கடத்தலை தடுக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதுபோல நடக்கிறோம், என்றார்.
COMMENTS