சென்னையில் போலீஸ்காரருக்கு அடி, உதை...! தாக்குதலில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து விசாரணை
🔸🔹சென்னையில் பணியில் இருந்த காவலரை தாக்கியவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். எழும்பூரில் உள்ள அழகு முத்துக்கோன் சிலை அருகே காவலர் தனசேகரனும், சப் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
🔸🔹அப்போது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த சிலர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை தட்டிக் கேட்டி தனசேகர் தாக்கப்பட்டார். இதையடுத்து தகராறில் ஈடுபட்ட 6 பேரை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்த செங்குட்டுவன், எழும்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணையில் ஈடுபட்டார்
COMMENTS