பலாத்கார வழக்கு: எம்.எல்.ஏ. மீது சி.பி.ஐ.,குற்றப்பத்திரிக்கை
🔸🔹புதுடில்லி: உ.பி.,யில், பா.ஜ. எம்.எல்.ஏ. ஒருவர் மீது இளம் பெண் அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துளளது.
உத்தர பிரதேசத்தில், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது சகோதரர்,கடந்த 2017- ஜூன் 4-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இளம் பெண் புகார் அளித்தார்.
🔸🔹நடவடிக்கை இல்லை
இதையடுத்து, தனக்கு நியாயம் வேண்டியும், நடந்த கொடுமைக்கு தீர்வு கிடைக்காததை கண்டித்து, இளம் பெண் முதல்வர் வீடு முன், தீக்குளிக்க முயன்றார்.பின்னர் .இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங் மீது, முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.
🔸🔹இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள், , லக்னோவிற்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தி மூன்று தனித்தனி வழக்குகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, எம்.எல்.ஏ., குல்தீப் சிங்கை கைது செய்யும்படி, அலகாபாத் உயர் நீதிமன்றம், சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.
🔸🔹இதையடுத்து குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கர் மீது 19 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
COMMENTS